தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ – குழு அமைப்பு!
ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக தகுதியுடைய ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் குழு
தமிழகத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் நல்லாசிரியருக்கான விருதை ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ என்னும் பெயரில் அரசு வழங்கி வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பா் 5 ஆம் தேதி அன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விருதுகளை பெறும் ஆசிரியர்களுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும் ஐந்து ஆயிரம் ரொக்கப் பணத்தையும் அரசு வழங்குகிறது.
இக்னோ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 16 கடைசி நாள்!
இந்த விருதினை பெற்றுக்கொள்வதற்கு அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். தவிர விருது வாங்க இருப்பவர்கள் உதவி ஆசிரியராக 15 ஆண்டுகளும், தலைமையாசிரியராக இருந்தால் அவர் 20 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். இது தவிர 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்றுக் கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன் படி ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ பெற தகுதியுடைய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த ஆண்டுக்கான இவ்விருதை சுமார் 385 ஆசிரியர்கள் பெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.