தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அவசர சிகிச்சை – மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர்:
நடிகர் விஜயகாந்த் சாதாரண நடிகராக இருந்து மக்களின் மனதில் புரட்சி கலைஞராக இடம் பிடித்தார். திரைத்துறையில் பணியாற்றிய போதே பலருக்கும் உதவும் குணத்தால் மிகவும் பிரபலமானார். நடிகராக இருந்து அரசியலில் குதித்தவர்களில் விஜயகாந்தும் ஒருவர். ஆனால் சில வெற்றி படிகளையும் அரசியலில் தொட்டார். இவரது ஆதரவால் சில முறை மற்ற கட்சிகள் ஆட்சியையும் பிடித்தது. தமிழக சட்ட பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.
5 மாவட்டங்களில் முகாம்கள் ரத்து – கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி!
இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசியலில் இவரது சார்பாக இவரது மனைவி பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், தற்போது மீண்டும் விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜகாந்த்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்றும் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.