தமிழகத்தில் முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு இதுவரை கலந்தாய்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாறுதல் கலந்தாய்வு:

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாட்டில் இருக்கும் 32 வருவாய் மாவட்டங்களில் 66 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வி மாவட்ட அலுவலகங்களின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் இருக்கிறார். இவர் குறிப்பிட்ட மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், நிர்வாகப் பணிகளைக் கவனித்தல், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் நடத்துதல், பொதுத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்களை வழங்கும் பணிகள் போன்றவைகளைத் தனது அலுவலகத்தின் கீழுள்ள பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்துகின்றனர்.

IPL 2021 – RR vs MI: அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர்கள் பணி உயர்வு பெறுவதன் மூலமும் குறிப்பிட்ட அளவு இப்பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர். முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 1,449 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

அதில், அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை போன்ற அனைத்து பணியிடங்கள் காலி பணியிடமாக கருதப்பட்டு அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணி மூப்பின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பினால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!