தமிழக பள்ளி, கல்லூரிகளில் கிருமிநாசினி தெளிப்பு – கொரோனா தொற்று எதிரொலி!!
தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் இன்று கிருமிநாசினி தெளிக்கப்படவுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி பணிகளும் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா பரவலுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் மிக சிறப்பாக நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நேற்று நடந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று சுமார் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை வாக்குச்சாவடிகளாக அமைத்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் – 71.79 சதவீத வாக்குப்பதிவு!!
தற்போது தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சுத்தப்படும் பணி துவங்கியுள்ளது. அதன்படி வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அறைகள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் படி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.