SBI வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பை சரிபார்க்கும் விரிவான செயல்முறை இங்கே!!
அரசின் மானிய தொகையினை பெறுவதற்கு ஏதுவாக எஸ்பிஐ வங்கியின் சேமிப்பு கணக்கை ஆதார் அட்டையுடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து விரிவான வழிகாட்டு முறைகளை இந்த பதிவில் காண்போம்.
எஸ்பிஐ வங்கி கணக்கு:
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) அரசு வழங்கும் மானியத்தொகையினை தனது வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இணைய வங்கியின் மூலமும் அல்லது வங்கியின் கிளையை பயன்படுத்தியும் ஆதார் அட்டையை இணைக்கலாம்.
ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அனுமதி!!
மத்திய அரசு தற்போதைய காலத்தில் பொதுமக்களின் நேரடி வங்கி கணக்கிலேயே மானியத் தொகையினை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மானியத் தொகையினை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று வங்கியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இணைய வங்கி வசதிகள் மற்றும் எஸ்பிஐ ஏடிஎம்களைப் பயன்படுத்தி இதனை செய்து கொள்ளலாம். இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆதார் அட்டையை வங்கிக் கணக்குகளுடன் இணைப்பது கட்டாயமில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
- முதலில் Uidai.gov.in இணையதளத்தில் நுழைய வேண்டும்.
- ‘எனது ஆதார்’ பகுதியின் கீழ் உள்ள ‘ஆதார் / வங்கி கணக்கு இணைக்கும் நிலையை சரிபார்க்கவும்’ என்ற தேர்வை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- ‘Send OTP’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
- OTP எண்ணை தற்போது உள்ளிட வேண்டும்.
- இப்பொழுது வரும் திரையில் உங்கள் ஆதார் அட்டையை பற்றிய விவரங்கள் வரும்.