ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அனுமதி!!
தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை அனுமதியளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்குகளை அறிவித்து வருகின்றனர். நோய் பரவலை தடுக்க ஊரடங்கு மட்டுமே தற்போது தீர்வாக உள்ளது என சுகாதாரத்துறை கூறுகிறது. அடுத்ததாக கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது.
தமிழகத்தில் 7 நாட்களுக்கு காய்கறி, மளிகை கடைகள் இயங்காது – மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
அனைத்து மாநிலங்களும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசுகள் அறிவித்து வருகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க அரசு அனுமதித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகள் இது தொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் கலந்தாலோசித்தது.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம் தடுப்பூசி போடும் திட்டத்தை மேலும் துரிதப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை கூறுகிறது. ஒரு பணியாளர், அவரின் மனைவி, அவர்களின் குழந்தைகள், பெற்றோர்கள், பிற சார்புடையவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.