தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் விளக்கம்!!
தமிழ்நாட்டில் 2022ம் ஆண்டு பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி மாதம் இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித்தேர்தல்:
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நகராட்சிகள் சில மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
2021-2022 நிதியாண்டில் இளைஞர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரங்கள் இதோ!
இந்த தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வரையறை செய்யும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதனால் தேர்தல் ஆணையம் அடுத்த கட்டமாக இடஒதுக்கீடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து 2022 பிப்ரவரி மாதம் உள்ளாட்சித்தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை ஜனவரி மாதம் 3வது வாரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வு!
இதையடுத்து அரசியல் அக்கட்சியினர் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். நடைபெற போகும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மற்றும் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் பெய்த தொடர் மழை மற்றும், ஓமைக்ரான் அச்சத்தால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது விரைவில் தேர்தல் தேதி வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.