சூரப்பா விவகாரத்தில் நேரில் ஆஜராக சம்மன்- நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.
நீதிமன்ற உத்தரவு:
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ரூபாய் 200 கோடி ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த புகாருக்கு சூரப்பா மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.
ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
இதன்படி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு துணைவேந்தர் சூரப்பா தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றர்.
இதன்படி துணை வேந்தர் பற்றிய வழக்கு விசாரணையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி வருகிற ஜனவரி 20-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கலையரசன் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் சரியாக ஒத்துழைக்காததால் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |