அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு – மோசமான நிலையில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அங்குள்ள நியூ செளத் வேல்ஸில் மாநிலத்தில் 681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளார்.
டெல்டா பிளஸ் வைரஸ் :
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி மக்களை பாதிப்பு உள்ளாகி வருகிறது. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, போன்ற நாடுகளில் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சில நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த நாட்டு அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை லிம்ரா நிறுவனம் நடத்தும் மாதிரி நீட் தேர்வு – ஆகஸ்ட் 25 மற்றும் 31 தேதிகளில் நடைபெறும்!!
தற்போது ஆஸ்திரேலியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. டெல்டா பிளஸ் வைரஸ் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிக வீரியத்துடன் காணப்படுகிறது. அதனால் ஆஸ்திரேலியாவில் மோசமான நிலை நிலவுகிறது. நியூ செளத் வேல்ஸில் மாநிலத்தில் 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
விக்டோரியாவில் நேற்றைய பாதிப்பினை விட இரண்டு மடங்கு அதாவது புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அங்கு ஆறாவது முறையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தலைநகர் உள்பட ஆகிய மூன்று இடங்களில் மொத்தமாக 754 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனாவோடு வாழ அனைவரும் கற்று கொள்ள வேண்டும். மேலும் மக்கள் விரைவாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று கிளாடிஸ் பெரெஜிக்லியன் என்று வலியுறுத்தி உள்ளார்.