டெல்லி பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – விதியை மீறினால் சட்டப்படி நடவடிக்கை!
தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தாததால் அட்மிட் கார்டு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு எந்த காரணம் கொண்டும் அட்மிட் கார்டு நிறுத்தி வைக்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அட்மிட் கார்டு
நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான டெல்லி கமிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் குழந்தைகளின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை மீறுவது தொடர்பான புகார்களையும் அல்லது தானாக முன்வந்து நோட்டீஸ் கொடுத்து விசாரணை மேற்கொண்டும் வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும், பல பள்ளிகள் மாணவர்களின் அட்மிட் கார்டுகளை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்து, கல்வி கட்டணத்தை வசூலிப்பதாக இந்த ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் அட்மிட் கார்டு மறுக்கப்பட்டால் அவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். மீண்டும் அடுத்த கல்வியாண்டில் தான் இவர்களால் இத்தேர்வை எழுத முடியும்.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் – அரசு ஒப்புதல்.. பணிகள் தீவிரம்!
அதனால் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தாமதமின்றி பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அனைத்து பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.