9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!!
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிப்புக்கு பின்னர் நாட்டில் மெல்ல தொற்றின் பரவல் குறையத் தொடங்கியது. இதனால் மாநில அரசுகள் மாநிலத்தில் உள்ள நிலைமையைப் பொறுத்து பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
அதிக பாதிப்பு:
பள்ளிகள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் செயல்பட்டு வந்தது. இருப்பினும் மாணவர்களிடையே கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கியது. மேலும், நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. டெல்லியில் கடந்த வாரம் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தது.
கல்வி இயக்குனரகம் அறிவிப்பு:
தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ள காரணத்தால் டெல்லி கல்வி இயக்குனரகம் மாநிலம் முழுவதும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும் பள்ளிக்கு அழைக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை குறைந்தது ஏப்ரல் 20ம் தேதி வரை தள்ளி வைப்பதற்கும் மாநில கல்வி அமைச்சர் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
This news for also tamilnadu