கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு டிச.6 விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மகா தீபம் வருகிற டிசம்பர் 6ம் தேதி அன்று ஏற்றப்பட உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விடுமுறை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்படும். இதில் முக்கிய நிகழ்வாக கோவிலின் பின்புறம் இருக்கும் 2268 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தை காண வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இந்த ஆண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகிற நவம்பர் 27ம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2268 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த அறிவிப்பில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகிற டிசம்பர் 6ம் தேதி அன்று தீப திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 6ம் தேதி அன்று அம்மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.