அரசு ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் செய்தி – சம்பள உயர்வு அமல்!
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சம்பள உயர்வு குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட ஊதிய குழுக்களின் பரிந்துரையின்படி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. 2007 ஜூலை 1 முதல் அகவிலைப்படி அதிகரிப்பு வழங்கப்படுகிறது. ஆறாவது ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்கள் 221% அகவிலைப்படி பெற்று வந்தார்கள். இதே போல் ஐந்தாவது ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்கள் 412 % பெற்று வந்தார்கள். தற்போது மத்திய நிதித்துறை கூடுதல் செயலாளர் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி ஆறாம் ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்கள் 230 சதவீத டிஏவும், ஐந்தாவது ஊதியக் குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்கள் 427% பெறுவார்கள்.
TNWEC Administrative Officer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,50,000/- || முழு விவரங்களுடன்!
இந்த உயர்த்தப்பட்ட ஊதியமானது நவம்பர் 1, 2023 முதல் வழங்கப்படும். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களுக்கு உள்ள தொகை ஊழியர்களின் பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூலை 1 முதல் பணியமர்த்தப்பட்டுள்ள அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு இத்திட்டத்தின் படி DA வழங்க உள்ளதாக நிதித்துறை கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஊதிய உயர்வு காரணமாக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.