மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி முடக்கம் நீக்கம்? சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!!
கடந்த ஆண்டு 2020 ஜனவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உத்தரவு தற்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உச்சத்தை தொடும்.
அகவிலைப்படி முடக்கம்:
கடந்த வருட கொரோனா நோய்த்தொற்று காரணமாக மத்திய அரசிற்கு வரி வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே நிதி பற்றாக்குறையை நீக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியை நிறுத்தம் செய்தது. இதனால் பல அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பாதிப்படைந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்த அகவிலைப்படி முடக்கம் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நீக்கப்படும் என்று தெரிகிறது. ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி நீக்கப்பட்டால் 7வது ஊதியக்குழு விதிப்படி தற்போது நிலையில் உள்ள 17 சதவீத அகவிலைப்படி 28 (17+3+4+4) ஆக அதிகரிக்கக்கூடும். 17 சதவீதம் அடிப்படையில் ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.21,000 ஆக இருந்தால் அவர்களுக்கு DA ரூ.3,570 ஆக இருக்கும். தற்போது 28 சதவீதமாக மாறினால் DA ரூ.5,880 ஆக உயரும்.
கொரோனா பரவலால் 144 தடை உத்தரவு அமல் – மாநகராட்சி அறிவிப்பு!!
மேலும் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டால் PF கணிசமாக அதிகரிக்கும். அதேபோல் DA வில் மற்றம் ஏற்படும். DA வில் மற்றம் ஏற்பட்டால் தனிமனிதர் கிராஜுவிட்டியிலும் மற்றம் ஏற்படும். ஜூலை 2021 முதல் DA வுடன் TA சேர்ந்து உயரும். தற்போது இந்த தகவலினால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே வேலையா போச்சு. திரும்ப திரும்ப டி.ஏ உயரப்போகிறது என்று எத்தனை நாளைக்கு சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? ஜூலை ஓன்றாம் தேதியிலிருந்து கொடுக்கப் போகும் அகவிலைப்படியுடன் சேர்த்து கொடுக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் சொல்லி விட்டார்கள். ஜூலை ஒன்றாம் தேதி கொடுக்க வேண்டியது செப்டம்பரில் தான் தெரியும். அதற்கு முன் எதுவும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது!