தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? – முக்கிய தகவல்!
தமிழக அரசின் ஊழியர்களுக்கான 2024 ஆம் ஆண்டு அகவிலைப்படி வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழக அரசின் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது 46 சதவீதம் அகவிலைப் படியை தமிழக அரசு ஊழியர்கள் பெற்று வருகிறார்கள்.
TNPSC Annual Planner 2024 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!
ஆனால் தற்போது தமிழகத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 உதவித்தொகை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும் நிலை உள்ளதால், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்குவதில் கால தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.