மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முடிவடைந்தவுடன் அகவிலைப்படி உயர்வு மற்றும் வீட்டு வாடகை படி உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 3% வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக இருக்கிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீதத்தின் அடிப்படையில் அகவிலைபடிக்கான பலனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மேலும் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு அகவிலைப்படி 50% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN TRB SGT 2024 தேர்வுக்கு 1766 காலியிடங்கள் – Exam Pattern & Syllabus விவரங்கள் இதோ!
இது போக, மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு சலுகையும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அகவிலைப்படியுடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியும் மூன்று சதவீதம் வரையிலும் உயர உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, வீட்டு வாடகைப்படி 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர இருக்கிறது. இந்த மாதம் முடிவடைந்தவுடன் இரண்டு பலனுக்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.