அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ‘இத்தனை’ சதவீதமா? – முக்கிய தகவல்!
அரசு ஊழியர்களுக்கான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதிய குழுவின் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்கள் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட பிரிவினருக்கு என்று ஊதிய குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின்படி ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதிய குழு உறுப்பினர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆறாவது ஊதியக்குழு உறுப்பினர்களுக்கு 220 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 230 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது போல் ஐந்தாவது ஊதிய வழங்கப்பட்டு வந்த வழங்கப்பட்டு வந்த 412 சதவீத அகவிலைப்படி, 427 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் எப்படி புக் செய்வது? எப்படி பெயர் மாற்றுவது? – எளிய வழிமுறைகள் இதோ!
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். முதல்வரின் அறிவிப்பின்படி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையாக வழங்கப்படும். ஜூலை 1 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை உள்ள அகவிலைப்படி நிலுவை தொகையானது பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்கால வைப்பு நிதி கணக்கு இல்லாத உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள அகவிலைப்படி நிலுவைத் தொகை NSC வகையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.