ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – காவல்துறை வெளியீடு!
ஐசிஐசிஐ (ICICI) வங்கியின் பெயரில் போலியான இணையதளங்கள் செயல்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கவனமாக இணையதள வங்கியை பயன்படுத்துமாறு டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.
போலி இணையதளம்:
நடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் குறிப்பிட்ட நேரம் வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போல் வங்கி சேவையும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று முதல் ATM ல் பணம் எடுக்க கட்டணம் வசூல்? விளக்கமான தகவல்!!
வங்கி சேவையும் அத்தியாவசியமாக உள்ளததால் குறிப்பிட்ட நேரம் வரை குறைந்த பணியாளர்களை வைத்து இந்த ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வருகிறது. வங்கிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இணையதள வங்கிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். வீட்டிலிருந்தே இந்த இணையம் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் தனக்கென இணையதளங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதில் போலி வலைதளங்கள் செய்லபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் பெயரில் போலியான இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி வரும் அதை கிளிக் செய்து விவரங்களை பதிவிட்டால் உங்களது வங்கி கணக்கு எண், ATM அட்டை கடவுச்சொல் போன்றவை அவர்களுக்கு கிடைத்து விடும். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் குறுஞ்செய்திகள் வழியாக வரும் வங்கியின் இணையதள முகவரியை பதிவிட்டு பயன்படுத்த வேண்டாம் என டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.