ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 23 2018
வணிக மற்றும் முதலீட்டுத்திட்டங்களை எந்தவொரு மனித இடைமுகமும் இல்லாமல் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் உத்திரபிரதேசம் ஆகும்.
மாநிலத்தின் 46 வளர்ச்சித் தொகுதிகளில் 10 சிக்கல்களை எதிர்கொள்ளும் திட்டமான “பரிவர்தன் (Parivarthan)”திட்டத்தை தொடங்கிய மாநிலம் ஹரியானா ஆகும்.
2018-ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி அன்று இஸ்ரேல் நிபுணத்துவத்தின் உதவியுடன் “வேளாண்மை மையம்” மிசோரோம் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
பெண் ஊழியர்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும் இந்தியாவின் முதல் பெரிய இரயில் நிலையமாக காந்திநகர் இரயில் நிலையம் ஜெய்ப்பூர் இராஜஸ்தானில் உள்ளது.
பிரதமர் நரேந்திமோடி அவர்களால், 200 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு தொழிற்துறை உற்பத்தி நடைபாதை (Defence Industrial Corridor) பண்டேல்கண்ட ;எனுமிடத்தில் நிறுவப்படும் என அறிவித்தார்.
உலகளாவிய ஊழல் குறியீட்டு எண் 2017-ல் 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 81வது இடத்தைப் பிடித்துள்ளது.
இர்மா புயல் காரணமாக ஏற்பட்ட அழிவுக்குப் பிறகு, டோங்காவில் புனர் வாழ்வு வேலை செய்வதற்காக இந்தியா அமெரிக்க டாலர் 1 மில்லியன் பங்களிப்பு வழங்கியுள்ளது.
இந்திய அரசாங்கம் இந்தியாவிற்கும் லிபேரியா நாட்டிற்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது.
தனியாக போர் விமானத்தில் பறந்து சென்ற முதல் இந்திய பெண் அதிகாரி என்ற பெருமையை அவனசதுர்வேதி பெற்றுள்ளார்.
சமீபத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட “ஹெக்சன்கஸ் வைட்டல்ஸஸ் (Hexanchus vitulus)” என்பவை சுறா இனங்கள் ஆகும.