நடப்பு நிகழ்வுகள் – மே 1 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 1 2019

முக்கியமான நாட்கள்

மே 01 – உலக தொழிலாளர் தினம்

  • 1886ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஒன்றுபட்ட வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அமெரிக்காவின் தொழில் நகரங்களில் 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக தொழிலாளர்கள் போராடினர்.
  • அப்போதுதான் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் உலகின் முதல் தொழிலாளர் இயக்கம் உருவாக்கப்பட்டது. தொடர் போராட்டத்தால் 1890ஆம் ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றது.
  • தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • சர்வதேச தொழிலாளர் தினம் 2019 தீம்அனைவருக்கும் நிலையான ஓய்வூதியம்: சமூக பங்குதாரர்களின் பங்கு“.

தேசிய செய்திகள்

புது தில்லி

ஜி.எஸ்.டி. தொடர்பான பிரிவை IGNOU தொடங்கவுள்ளது

  • இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ), ஜூலை 2019 ஆம் ஆண்டு அமர்வுகளில் இருந்து சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) தொடர்பான பாடத்திட்டத்தை தொடங்க மும்பை பங்குச் சந்தை லிமிடெட் உடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேச பிராந்தியத்தின் நபார்டு CGM ஆக செல்வராஜ் பொறுப்பேற்றார்

  • செல்வராஜ், வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் ஆந்திர பிரதேச பிராந்திய அலுவலகத்தின் தலைமை பொது மேலாளராக (நபார்டு) பொறுப்பேற்றுள்ளார்.

சோபா நாயுடுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

  • புகழ்பெற்ற குச்சிப்புடி நடன கலைஞரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சோபா நாயுடுவுக்கு விஜயநகரத்தில் நர்த்தனசாலா நடன அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நடன நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு

கிர்கிஸ்தானின் பெண் அதிகாரிகள் OTA இல் பயிற்சி பெறுகின்றனர்

  • கிர்கிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் ஐந்து பெண்கள் சென்னையின் OTA இல் துப்பாக்கி சூடு பயிற்சி செய்தனர். கடந்த இரண்டு வாரங்களாக OTA இல் ஐந்து கிர்கிஸ் பெண் அதிகாரிகள் ஆயுத பயிற்சி மேற்கொண்டனர்.

மகாராஷ்டிரா

104 மும்பை போலீசாருக்கு Insignia விருது

  • ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா தினத்தன்று விருது வழங்கும் விழாவில், டி.ஜி.பி., போலீசாரின் டிராக் பதிவு மற்றும் முக்கியமான கட்டங்களில் முன்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக விருதுகளை வழங்குவார். இந்த ஆண்டு, 800 க்கும் மேற்பட்ட போலீசார் விருது பெற உள்ளனர், அதில் 104 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செய்திகள்

ஜப்பான் புதிய பேரரசரை பெறுகிறது

  • புதிய ரெய்வா ஏகாதிபத்திய காலத்தின் துவக்கத்தை ஜப்பான் வரவேற்றது, புதிய பேரரசரராக, நருஹிடோ (59) பதவி ஏற்றார். இதற்கு முன்பு நருஹிடோவின் தந்தை அக்கிஹிட்டோ பேரரசராக(85) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது காலம் ஹெய்செய் ஏகாதிபத்திய காலமாகும். 

வணிகம் & பொருளாதாரம்

இந்தியாவில் இருந்து 5 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய அமேசான் முனைப்பு

  • கடந்த மூன்று ஆண்டுகளில் இ-வணிக நிறுவனமான அமேசானின் உலகளாவிய விற்பனை திட்டம் மூலம் இந்தியாவில் இருந்து மொத்தம் இ-வணிக ஏற்றுமதி விற்பனை 1 பில்லியன் டாலர் மதிப்புக்கு செய்யப்பட்டு ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான இந்திய இ-வணிக ஏற்றுமதியில் 56% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

M / S CSL மற்றும் M / S GRSE இடையே ஒப்பந்தம்

  • M / s CSL, கொச்சி மற்றும் M / S GRSE கொல்கத்தா ஆகியவற்றில் இருந்து தலா எட்டு Anti Submarine Warfare Shallow Water Craft (ASW SWC) கப்பல்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய கடற்படைக்கான பதினாறு Anti Submarine Warfare Shallow Water Craft (ASW SWC) கொள்முதல் செய்ய M / S CSL மற்றும் M / S GRSE உடன் ஒப்பந்தம் கையெழுத்திடபட்டுள்ளது. 

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

அமேசான் பே ஆண்ட்ராய்டில் உடனடி பணப் பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது

  • அமேசான் செயலியின் UPI தளத்தை பயன்படுத்தி உடனடி வங்கி-to-வங்கி பரிமாற்றங்கள் செய்யக்கூடிய ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான நபர்-to-நபர் (P2P) செலுத்தும் முறையை அமேசான் பே செயல்படுத்துகிறது.

பார்தி ஏர்டெல் வின்க் டியூப்[Wynk Tube] இசை செயலியை அறிமுகப்படுத்தியது

  • பார்தி ஏர்டெல் ஒரு இசை பயன்பாடு வின்க் டியூப்[Wynk Tube] ஐ அறிமுகப்படுத்தியது, இது அதன் Wynk மியூசிக் பயன்பாட்டின் விரிவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. Wynk Tube பயனர்கள் அதே இடைமுகத்தில் பிரபலமான ஆடியோ மற்றும் வீடியோ டிராக்குகளை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும்.

விளையாட்டு செய்திகள்

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்

  • நன்னிங், சீனாவில் மே 19 முதல் 26 வரை நடைபெறும் சுதிர்மான் கோப்பை கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பி.வி. சிந்து, கே. ஸ்ரீகாந்த் மற்றும் சைனா நேவால் தலைமையில் பங்கேற்க உள்ளனர்.

PDF Download

Daily Current Affairs – May 01 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!