நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 13, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 13, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 முக்கியமான நாட்கள்

ஆகஸ்ட் 13 – சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம்
  • இடது கை பழக்கமுள்ளவர்களின் தனித்துவத்தையும் வேறுபாடுகளையும் கொண்டாட ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் லெஃப்டாண்டர்ஸ் இன்டர்நேஷனலின் நிறுவனர் டீன் ஆர். காம்ப்பெல் அவர்களால் அனுசரிக்கப்பட்டது.

தேசிய செய்திகள்

இந்திய மருத்துவ  முறைகளை வழங்கும் சிறப்பு மருத்துவமனைகளை அரசு தொடங்க உள்ளது
  • சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறைகளை வழங்கும் சிறப்பு மருத்துவமனைகள் நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் தொடங்கப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபாத் யெசோ நாயக் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வேலூரில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைக்கும் போது இதனை அவர் கூறினார்.

சத்தீஸ்கர் 

ராய்ப்பூரில் 15 கி.மீ நீளமுள்ள தேசியக் கொடியின் மனித சங்கிலி நிகழ்ச்சி 
  • சத்தீஸ்கரில், சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பல சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் சேர்ந்து 15 கி.மீ நீளமுள்ள தேசியக் கொடியை ராய்ப்பூரில் மனித சங்கிலி மூலம்  உருவாக்கினர். வசுதைவ் குடும்பகம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி,(மிக நீண்ட மூவர்ண கொடிக்காக  ) சாம்பியன்ஸ் உலக சாதனைகளின் புத்தகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச செய்திகள்

சூறாவளி லெக்கிமா
  • சீனா நாட்டின் கிழக்குப் பகுதியில் சூறாவளி லெக்கிமாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. லெகிமா ஷாங்காயின் வடக்கே ஜியாங்சு மாகாணத்திற்குள் நுழைந்து ஷாண்டோங் மாகாணத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல்

சந்திரயன் -2 சந்திரனை நோக்கி செல்கிறது
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் டாக்டர் கே. சிவன் கூறுகையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி இஸ்ரோ டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன் எனப்படும் ஒரு திசை மாற்றத்தை  செய்யவுள்ளது, இதன் மூலம் சந்திரயான் 2 பூமியை விட்டு வெளியேறி சந்திரனின் சுற்றுப்பாதையை நோக்கி நகரும். மேலும் இந்த மாதம் 20 ஆம் தேதி விண்கலம் சந்திரனின் சுற்றுப்பாதையை எட்டும் என்றும்,இவ்வாறு  தொடர்ச்சியான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அடுத்த மாதம் 7 ஆம் தேதி சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தலைவர்கள் தெரிவித்தனர்.
வளர்ந்த பாக்டீரியாக்களைக் கண்டறிய உதவும் குறைந்த விலை கையடக்க சாதனம்
  • இந்திய தொழில்நுட்பக் கழகம் – குவஹாத்தியின் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த விலையில் கையடக்க உயிர் இணக்க சென்சார் ஒன்றை உருவாக்கிவுள்ளனர், இது உயிரணு கலாச்சாரம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுகள் இல்லாமல் பாக்டீரியாக்களை கிட்டத்தட்ட உடனடியாகக் கண்டறிய உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

நியமனங்கள்

ஷங்கர் ராவ் சிக்கிமின் புதிய டிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ளார்
  • மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ.சங்கர் ராவ் சிக்கிமின் புதிய காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் கேடரின் 1987 தொகுதி ஐ.பி.எஸ் அதிகாரியான திரு.ராவ், தொழிலாளர் துறைக்கு முதன்மை செயலாளராக மாற்றப்பட்ட எஸ்.டி. நேகி க்கு பதிலாக பொறுப்பேற்றுள்ளார்.

விருதுகள்

2016-17 தேசிய இளைஞர் விருதுகள்
  • சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு 2016-17 ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருதுகளை இருபது நபர்கள் மற்றும் மூன்று அமைப்புகளுக்கு வழங்கினார்.
  • தேசிய இளைஞர் விருது விழாவின் போது, ஸ்ரீ கீரன் ரிஜிஜு “சீனா மூலம் இந்திய இளைஞர்களின் கண்கள் – 2019” குறித்த புகைப்பட கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அண்மையில் சீனாவுக்கான இளைஞர் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்ற இளைஞர் பிரதிநிதிகள் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி இதுவாகும்.

தரவரிசைகள் 

ஏடிபி தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் உள்ளார்
  • விம்பிள்டன் 2019 சாம்பியனான நோவக் ஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்,மேலும் தனது 35 வது மாஸ்டர்ஸ் பட்டத்தை பெற்ற ரஃபேல் நடால் இரண்டாவது இடத்திலும் ,ரோஜர் பெடரர் மூன்றாவது இடத்திலும், டொமினிக் தீம் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

விளையாட்டு செய்திகள்

கோடிஃப் கோப்பையில் இந்திய பெண்கள் அணி சிறப்பு மூன்றாம் இடத்தைப் பிடித்தது
  • வலென்சியாவில் நடந்த COTIF கோப்பையில் இந்திய மகளிர் கால்பந்து அணியின் செயல்திறனால் ஈர்க்கப்பட்ட போட்டியின் தலைவர் வீரர்களுக்கு சிறப்பு மூன்றாம் இட கோப்பையை வழங்கினார். இந்த தொடரில் இந்தியா நான்கு போட்டிகளில் விளையாடியது, அதில் இரண்டு போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் விளையாட்டுகளில் உலக பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஐஸ்வர்யா பிஸ்ஸே பெற்றார்
  • ஹங்கேரியின் வார்பலோட்டாவில் நடந்த சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றுக்குப் பிறகு பெண்கள் பிரிவில் எஃப்ஐஎம் உலகக் கோப்பையை சேர்த்து, மோட்டார் விளையாட்டுகளில் உலக பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஐஸ்வர்யா பிஸ்ஸே பெற்றார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!