நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 20 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 20 2018

முக்கியமான நாட்கள்

நவம்பர் 20 – உலகளாவிய குழந்தைகள் தினம்

  • ஐக்கிய நாடுகளின் உலகளாவிய குழந்தைகள் தினம் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20 அன்று சர்வதேச ஒற்றுமை, உலகளாவிய குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை மேம்படுத்த, குழந்தைகளின் நலன் மேம்பட கொண்டாடுகிறது.
  • 2018 தீம்: Children are taking over and turning the world blue

தேசிய செய்திகள்

கோவா

49 வது சர்வதேச திரைப்பட விழா

  • இந்தியாவின் 49 வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவா பனாஜி நகரில் தொடங்கியது.

தமிழ்நாடு

ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை தமிழக அரசு அறிவித்தது

  • மாநிலத்தில் பதினோரு கடலோர மற்றும் உள் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை அறிவித்தார்.

திரிபுரா

7 வது சர்வதேச சுற்றுலா மார்ட்

  • திரிபுராவின் அகர்தலாவில் “7 வது சர்வதேச சுற்றுலா மார்ட்” 2018 ஆம் ஆண்டு நவம்பர் 22 முதல் 24 ஆம் தேதி வரை மாநில சுற்றுலாத் துறை, திரிபுரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைந்து, இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.

சர்வதேச செய்திகள்

மாலத்தீவு அமைச்சரவை காமன்வெல்த்துடன் மீண்டும் இணைவதற்கு ஒப்புதல்

  • மாலத்தீவு அமைச்சரவை 53 நாடுகளின் குழுவில் இருந்து வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காமன்வெல்த் குழுவில் மீண்டும் இணைவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

குவாத்தமாலா: பியூகோ எரிமலை வெடித்தது

  • குவாத்தமாலாவில், ஃபூகோ எரிமலை இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக வெடித்தது, மலைப்பகுதியில் எரிமலைக்குழம்பு மற்றும் சாம்பலை மிகுந்த அளவு வெளித்தள்ளியது.

பிரிட்டிஷ் பிரதமர் வரைவு பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான வணிக ஆதரவைப் பெற்றார்

  • பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே ப்ரூசெல்லுடனான தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் தனது வரைவு பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான பெருவணிகத்தின் ஆதரவை வென்றார்.

வணிகம் & பொருளாதாரம்

மூலதன உபரி பற்றிய பிரச்சினைகளை ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவு

  • மத்திய வங்கியுடன் ரூ. 9.69 லட்சம் கோடி உபரி மூலதனத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு உயர்-ஆற்றல் குழு ஒன்றை அமைக்க ஆர்.பி.ஐ. குழு முடிவு செய்துள்ளது.

எளிதில் வணிகம் செய்வதற்கான பெரும் சவால்

  • இந்தியாவின் பிரதம மந்திரி அடையாளம் காணக்கூடிய ஏழு வணிக பிரச்சனைகளை தொழிநுட்பங்களை பயன்படுத்தி தீர்ப்பதற்கான பெரும் சவால் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
  • தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க இளம் இந்தியர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களின் திறனைத் தூண்டுவதே இந்த சவாலின் நோக்கமாகும்.

மாநாடுகள்

காலநிலை மாற்றம் பற்றிய 27 வது BASIC அமைச்சர்கள் கூட்டம்

  • காலநிலை மாற்றத்திற்கான 27 வது BASIC ஆலோசனைக் கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான டெல்லியில் நடத்தப்பட்டது.
  • BASIC (பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா) நாடுகள், புது தில்லியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

பேரழிவு மேலாண்மையில் ஊடகத்துறைக்கான பங்குபற்றிய ஓர்க்ஷாப்

  • உள்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் கிரன் ரிஜிஜூ புது தில்லியில், ‘பேரழிவு மேலாண்மையில் ஊடகத்துறைக்கான பங்கு’ பற்றிய ஓர்க்ஷாப்பைத் திறந்து வைத்தார்.
  • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(NDMA), இந்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM), ஆகியவையால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. 

திட்டங்கள்

நரி சஷக்திகரன் சங்கல்ப் திட்டம்

  • உத்திரப்பிரதேசத்தில், நரி சஷக்திகரன் சங்கல்ப் திட்டம் அல்லது மகளிர் அதிகாரமளித்தல் பிரச்சாரம் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களால் தொடங்கப்பட உள்ளது.
  • ஒரு மாதக் காலம் நடைபெறும் பிரச்சாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

நகர் எரிவாயு விநியோகத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா(CGD)

  • 9 வது சி.ஜி.டி. ஏலத் திட்டத்தின் கீழ் 129 மாவட்டங்களில் 65 புவியியல் பகுதிகள் (GAs) உள்ள நகர் எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான (CGD) அடிக்கல் நாட்டு விழா பிரதமரால் அமைக்கப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • ஜார்க்கண்ட் குடிமக்களுக்கு நம்பகமான, தரம் வாய்ந்த மற்றும் மலிவு 24×7 மின்சாரம் வழங்க ஜார்க்கண்ட் பவர் சிஸ்டம் மேம்பாட்டு திட்டத்திற்கான 310 மில்லியன் டாலருக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்திய அரசு மற்றும் உலக வங்கிக்கு இடையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பங்கதம் கையெழுத்தானது.

பாதுகாப்பு செய்திகள்

வியட்நாமிற்கு இராணுவ தளபதிகளின் தலைவர் விஜயம்

  • இராணுவ தளபதிகளின் தலைவரான பிபின் ராவத் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

  • ரேடியோ காஷ்மீர்டைம்ஸ் ஆஃப் பீஸ் அண்ட் வார் என்ற புத்தகத்தை டாக்டர் ராஜேஷ் பாட் எழுதி [டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்]

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

ஏரோ இந்தியா 2019

  • ‘ஏரோ இந்தியா 2019’ இன் 12 வது பதிப்பு 20 முதல் 24 பிப்ரவரி 2019 வரை பெங்களூருவில் உள்ள எலஹன்கா விமான தளத்தில் நடைபெறும்.
  • இந்த ஐந்து நாள் நிகழ்வு பொது விமான நிகழ்ச்சிகளுடன் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களின் ஒரு பெரிய வர்த்தக கண்காட்சியை இணைக்கும்.

விளையாட்டு செய்திகள்

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 48 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் நுழைந்தார் ஐந்து முறை உலக சாம்பியனான மேரி கோம்.

சுப்ரோதா சர்வதேச கால்பந்துக் கோப்பை

  • 59 வது சுப்ரோதா சர்வதேச கால்பந்து கோப்பை ஆண்களுக்கான U-17 இறுதிப்போட்டி புதுதில்லியில் நடக்க உள்ளது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!