நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 13 2018
தேசிய செய்திகள்
புது தில்லி
அன்டார்க்டிக்காவின் மவுண்ட் வின்சனுக்கான பயணம்
- அன்டார்க்டிக்காவின் மவுண்ட் வின்சனுக்கான பயணத்தை துவக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியிடம் அருணிமா சின்ஹா மூவர்ணக் கொடியை பெற்றார். அருணிமா சின்ஹா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் திவ்யங்[மாற்றுத்திறனாளி] என்பது குறிப்பிடத்தக்கது.
- அருணிமா சின்ஹா இதற்கு முன்னர் ஐந்து கண்டங்களில் உள்ள மிக உயர்ந்த சிகரங்களையும் அடைந்துள்ளார், இந்த சாதனையை அடைந்த முதல் பெண் திவ்யங்[மாற்றுத்திறனாளி] இவர் ஆவார்.
நிலத்தடி நீரை பிரித்தெடுக்க திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்
- நிலத்தடி நீர் பிரித்தெடுப்புக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டன, 2019 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிகள் நாட்டின் மிக வலுவான நிலத்தடி நீரின் கட்டுப்பாட்டு முறைமையை உறுதிப்படுத்துவதாகும்.
- முதல் முறையாக நீர் பாதுகாப்புக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது
உத்திரப்பிரதேசம்
கும்பமேளாவுக்கு 41 ரயில்வே திட்டங்கள்
- அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலகாபாத்தில் தொடங்கும் கும்ப மேளாவுக்கு ரூ. 700 கோடி செலவில் 41 திட்டங்களுக்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்
வெளி இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்ய ஸ்வீடன் திட்டம்
- விளையாட்டு மைதானம் மற்றும் ரயில் நிலைய தளங்கள் உட்பட சில பொது இடங்களில் வெளி இடங்களில் புகைப்பதை ஸ்வீடன் அரசு தடை செய்தது. புதிய சட்டத்தின் படி, 2025 ஆம் ஆண்டளவில் ஸ்காண்டினேவியா நாடு புகைப்பிடித்தல் இல்லா நாடாக மாற்றத் திட்டம்.
பிரிட்டிஷ் பிரதமர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
- பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அவருக்கு 200 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது, 117 உறுப்பினர்கள் அவரை எதிர்த்து வாக்களித்தனர்.
வணிகம் & பொருளாதாரம்
என்.எஸ்.இ.க்கு எதிராக செபி நீதிமன்றத்தில் வழக்கு
- என்.எஸ்.இ.க்கு மற்றும் 30 பரிமாற்ற நிறுவனங்களுக்கு எதிராக, இந்தியாவின் பங்கு பத்திர பரிமாற்றம் வாரியம்[SEBI] நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
மாநாடுகள்
5 வது நிறுவன இந்தியா நிகழ்ச்சி
- மியான்மரில் உள்ள யாங்கனில் 5 வது நிறுவன இந்தியா நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இது இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் மியன்மார் சம்மேளன வர்த்தக சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டது.
- மாநாட்டின் முக்கியத்துவம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகும்.
இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழக ஒர்க்ஷாப்
- இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (IDU) மூன்று படைகளைச் சேர்ந்த மூத்த மற்றும் நடுத்தர அதிகாரிகளுக்கு ‘நிலைத்தன்மைக்கான கருத்தாய்வு’ பற்றிய இரு நாள் பயிற்சி வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நியமனங்கள்
- ஸ்ரீ பாரத் பூஷண் வியாஸ் – யுபிஎஸ்சி உறுப்பினராக பொறுப்பேற்பு
திட்டங்கள்
பிரதிபா பர்வா
- மத்தியபிரதேசத்தில், பிரதிபா பர்வா எனும் மூன்று நாள் திட்டம் மூலம் பள்ளிக்குழந்தைகளின் திறமையை வளர்ப்பதற்காக அனைத்து முதன்மை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பள்ளி கல்வித்துறையின் பிரதான திட்டமான “பிரதிபா பர்வா” அடிப்படை கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக ஆகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் இந்திய அரசாங்கம் புதுடில்லியில் ஒரு $ 60 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே வெள்ளம் விளைவிக்கும் பகுதிகளில் வெள்ளப் பாதுகாப்பு வேலைகள், வெள்ளப்பெருக்கங்களின் புனரமைப்பு மற்றும் சமூக அடிப்படையிலான வெள்ள அபாயம் மேலாண்மை நடவடிக்கைகள் ஆகியவற்றை தொடரவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்து.
விளையாட்டு செய்திகள்
ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை
- புவனேஸ்வரில் நடைபெறும் ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.
PDF Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு