நடப்பு நிகழ்வுகள் – 12 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 12 மே 2023
தேசிய செய்திகள்
‘ போஷன் பி , பதாய் பி ’ என்ற குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான அங்கன்வாடி திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது .
அங்கன்வாடி மையங்களை சத்துணவு மையங்களாக மாற்றுவது மட்டுமின்றி , கல்வி அளிக்கும் மையங்களாகவும் உருவாக்கும் வகையில் ‘ போஷன் பி , பதாய் பி ’ என்ற குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .
இந்த திட்டத்தை செயல்படுத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது ரூ .600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனமானது (NIPCCD) இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது .
“திவ்ய கலா மேளாவை மே 11 முதல் 17 வரை கௌஹாத்தியில் நடத்த மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை (திவ்யாங்ஜன்) ஏற்பாடு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிப்புத் துறையானது ( திவ்யாங்ஜன் ) நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளில் தொழில்முனைவோர் / கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனைக் காண்பிக்கும் ஒரு தனித்துவமான நிகழ்வை அஸ்ஸாமில் ஏற்பாடு செய்துள்ளது .
இந்த நிகழ்வின் மூலம் மாற்றுதிறனாளிகளின் வாழ்க்கை தரம் மேம்படும் என எதிர்ப்பர்ர்க்கப்டுகிறது . 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் கவுகாத்தியில் தொடங்கி 12 நகரங்களில் இந்த நிகழ்வானது நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .
புதுதில்லியில் ‘ புத்தம் சரணம் கச்சாமி (Buddam Saranam Kachami) என்ற கண்காட்சியை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தொடங்கி வைத்துள்ளார் .
மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மே 11 அன்று புது தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் “ புத்தம் சரணம் கச்சாமி ” என்ற கண்காட்சியைத் தொடங்கி வைத்துள்ளார் .
கலையின் ஆன்மீகம் மற்றும் பௌத்தத்துடன் தொடர்புடைய கூறுகள் மற்றும் ஞானம் , இரக்கம் மற்றும் அவற்றின் அமைதி ஆகியவற்றின் உலகளாவிய மதிப்புகளை வெளிப்படுத்தும் அதன் பயணத்தை ஆராய்வதை இந்த கண்காட்சி நோக்கமாக கொண்டுள்ளது .
இந்திய தபால் துறையானது “ பாரத் இ – மார்ட் போர்டல் “(Bharat E-Mart) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .
சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு தளவாடங்களை வழங்க இந்தியா போஸ்ட் “ பாரத் இ – மார்ட் போர்டல் “(Bharat E-Mart) என்ற இணைய அடிப்படையிலான அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது .
இந்த பாரத் இமார்ட் போர்ட்டலானது , வர்த்தகர்களின் வளாகத்திலிருந்து சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதியை வழங்கவும் மற்றும் நாடு முழுவதும் உள்ள சரக்குதாரர்களின் வீட்டு வாசலில் டெலிவரி செய்வதையும் உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது . இதன்படி CAIT உடன் தொடர்புடைய எட்டு கோடி வர்த்தகர்கள் இதன்மூல பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
“ ஹரித் சாகர் ” என்ற பசுமை துறைமுக வழிகாட்டுதல்கள் 2023 அறிமுகம் .
மத்திய துறைமுக அமைச்சர் சர்பானந்தா சோனோவால் , புது தில்லியில் மே 10 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் , ‘ ஹரித் சாகர் ’ என்ற பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளார் .” பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை ” அடைவதே இதன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது .
பசுமையான ஹைட்ரஜன் , பச்சை அம்மோனியா , மற்றும் பசுமை மெத்தனால் அல்லது எத்தனால் போன்ற எரிபொருட்களை சேமிப்பதற்கும் , அதனை கையாளுவதற்கும் மற்றும் துறைமுக திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த வழிகாட்டுதல்கள் உதவும் என கூறப்பட்டுள்ளது .
யுனெஸ்கோவின் பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்க “ சாந்திநிகேதன் ” முன்மொழியப்பட்டதாக மத்திய அரசங்கம் தெரிவித்துள்ளது .
யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்க சர்வதேச ஆலோசனை அமைப்பால் “ சாந்திநிகேதன் ” பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார் .
“ சாந்திநிகேதன் ” என்பது நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும் .
மாநில செய்திகள்
‘நடக்கும் உரிமையை’ அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை பஞ்சாப் பெறுகிறது.
பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களின் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் , பஞ்சாப் மாநிலமானது நடக்கும் உரிமையை அமல்படுத்தியது .
இந்த சட்டத்தின் மூலம் NHAI உட்பட அனைத்து நிறுவனங்களும் நடைபாதை மற்றும் சைக்கிள் தடங்களை வழங்குவதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது . சாலை விபத்துக்களில் இறந்த பாதசாரிகளின் எண்ணிக்கையானது 2019 இல் 25,858 இல் இருந்து 2021 இல் 29,124 ஆக அதிகரித்துள்ளது என்பதால் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது .
நியமனங்கள்
பேட்மிண்டன் ஆசியா போட்டியின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவின் தலைவராக BAI யின் இணைச் செயலர் உமர் ரஷித் நியமிக்கப்பட்டுள்ளார் .
இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் இணைச் செயலாளர் உமர் ரஷித் , அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு “ பேட்மிண்டன் ஆசிய ” போட்டியின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .
தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவின் தலைவராக , ரஷீத் , நாடு முழுவதும் பேட்மிண்டன் போட்டிகளில் நடுவர் தரத்தினை உயர்த்தி , விதிகளை மேம்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்பார்வையிடுவார் என நிர்வாகம் தெரிவித்துள்ளது .
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் புதிய தலைவராக “ பர்மிந்தர் சோப்ரா ” நியமனம் .
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் ( பிஎஃப்சி ) முதல் பெண் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (CMD) “ பர்மிந்தர் சோப்ரா ” பொறுப்பேற்கிறார் .
பொது நிறுவனங்களின் தேர்வு வாரியமானது ( பிஇஎஸ்பி ) 08 மே அன்று “ பர்மிந்தர் சோப்ராவின் ” பெயரை பிஎஃப்சியின் அடுத்த சிஎம்டியாக நிர்வகிக்க பரிந்துரைத்தது . சிஎம்டியாக தனது புதிய வேலையில் , பர்மிந்தர் சோப்ரா பிஎஃப்சியில் புது மற்றும்ஊக்குவிக்கும் முயற்சிகளை இயக்குவதற்கும் அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்துவதற்கும் இவர் பொறுப்பாவார் என நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது .
குஸ்ஸியின் தூதராக “ ஆலியா பட் ” நியமிக்கப்பட்டுள்ளார்
குஸ்ஸியின் முதல் இந்திய உலகளாவிய தூதராக “ ஆலியா பட் ” நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் சியோலில் நடக்கும் குஸ்ஸி குரூஸ் 2024 என்ற நிகழ்ச்சியில் முதல்முறையாக இவர் தோன்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
‘ இன் ஹானர் ஆஃப் கார்ல் ‘ என்ற கருப்பொருளின்படி சமீபத்தில் ஆலியா பட் மேட் கேளா விழாவில் பங்கேற்றார் என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும் .
தொல்லியல் ஆய்வுகள்
ஏலகிரி மலைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் “ விஜயநகர கால நடுகற்களானது ” கண்டெடுக்கப்பட்டுள்ளது .
திருப்பத்தூர் தமிழ்த்துறை பேராசிரியர் க . மோகன் காந்தி அவர்களின் தலைமையில் , சமீபத்தில் ஏலகிரி மலையில் கள ஆய்வை மேற்கொள்ளும்போது இரு நடுகற்களை கண்டெடுத்துள்ளனர் .
இந்த இரு நாடுகற்களானது விஜய நகர காலத்தில் ஏற்பட்ட போரின் போது வீர மரணம் அடைந்த இரண்டு படைவீரர்களுக்காக எழுப்பப்பட்ட நடுகற்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது . இந்த நாடுகற்களானது ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களாகும் .
விருதுகள்
தமிழகத்தின் நகர தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அமெரிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
அகர்வால் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஸ்வின் அகர்வால் அவர்களுக்கு “ அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை ” (ASRCRS) பிரிவின் கீழ் ‘ கோல்டன் ஆப்பிள் ’ விருதை பெற்றுள்ளார் .
கூம்பு வெண்படலத்தால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுப்பதற்காக “ புதிய சிகிச்சை உத்திகளைக் ” கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த கோல்டன் ஆப்பிள் விருது வழங்கப்பட்டுள்ளது .
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவண படத்திற்கு “ பீபாடியின் ஆவணப்படப் பிரிவின் ” கீழ் விருதை வென்றுள்ளது .
ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷின் ஆகியோரின் உருவாக்கத்தில் வெளிவந்த “ ரைட்டிங் வித் ஃபயர் “, ஆவணப்படப் பிரிவின் கீழ் பீபாடி விருதை வென்றுள்ளது .
இந்த ஆவணப்படமானது இந்தியாவில் பெண்கள் தலைமையிலான ஒரே செய்தித்தாள் “ கபர் லஹரியா “ வானது டிஜிட்டல் பத்திரிகையாக எப்படி மாறுகிறது என்பதை பற்றிய கதைக்களமாக அமைந்துள்ளது . இந்த பீபாடி விருந்தானது அமெரிக்காவின் மிகப் பழமையான பெரிய மின்னணு ஊடக விருது ஆகும் .
இரங்கல் செய்தி
மெக்சிகோ நாட்டின் கால்பந்து ஜாம்பவானான “அன்டோனியோ கார்பஜல்” தனது 93வது வயதில் காலமானார்.
‘ லா டோட்டா ‘( ஐந்து கோப்பைகள் ) என்ற புனைப்பெயரை கொண்ட மற்றும் 1950 மற்றும் 1966 க்கு இடைப்பட்ட FIFA உலகக் கோப்பையின் நாயகனாக திகழ்ந்த கார்பஜல் 11 மே அன்று உயிர் துறந்தார் .
அவரது பெவிலியன் வாழ்க்கையானது 1948 மற்றும் 1966 க்கு இடையில் 18 ஆண்டுகள் நீடித்தது மற்றும் அங்கு அவர் 16 ஆண்டுகளில் 364 ஆட்டங்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது .
முக்கிய தினம்
சர்வதேச செவிலியர் தினம்
புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதியில் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது . உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களின் பணி அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு உலகளாவிய நிகழ்வாக சர்வதேச செவிலியர் தினம் பார்க்கப்படுகிறது .
எங்கள் செவிலியர்கள் . நமது எதிர்காலம் என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும் .