ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
கர்நாடகா மாநிலத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு பிறகு பெங்களூரு உள்ளிட்ட சில நகரங்களில் தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கொரோனா 2 ஆம் பரவல் தீவிரமடைந்து வந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கானது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த ஆலோசனையில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். இருப்பினும் முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில், பெங்களூரு நகரத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்படக்கூடும் என தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழக முதல்வரின் சிங்கார சென்னை 2.0 திட்டம் – விரைவில் தொடக்கம்!!
இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, 5% க்கும் குறைவான கொரோனா பாதிப்பு வீதம் உள்ள மாவட்டங்கள் தோறும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் வரும் 4 அல்லது 5 நாட்களுக்குள் 5% க்கும் குறைவான பாதிப்பு விகிதம் உள்ள மாவட்டங்களில், எவ்வகையான தளர்வுகளை அளிக்கலாம் என்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிறகு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், கர்நாடகாவின் கோவிட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அறிக்கையில், கொரோனா பாதிப்பு விகிதம் 5% க்கும் குறைந்தால் மட்டுமே தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என்றும், அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு 5,000 க்கும் குறைவான பாதிப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இவற்றைத் தொடர்ந்து, பெங்களூரு நகரத்தில் பாதிப்பு விகிதம் 4.91% ஆக குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் அந்நகரத்தில் சிறிது தளர்வுகளை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில் இன்று (ஜூன் 9) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் எடியூரப்பா இறுதி முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொடர்பான பணிகளை கையாளும் அமைச்சர்களுடன் முதல்வர் கலந்துரையாடிய பிறகு, ஊரடங்கு குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 11,958 புதிய பாதிப்புகளும், 199 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.