தமிழக முதல்வரின் சிங்கார சென்னை 2.0 திட்டம் – விரைவில் தொடக்கம்!!

0
தமிழக முதல்வரின் சிங்கார சென்னை 2.0 திட்டம் - விரைவில் தொடக்கம்!!
தமிழக முதல்வரின் சிங்கார சென்னை 2.0 திட்டம் - விரைவில் தொடக்கம்!!
தமிழக முதல்வரின் சிங்கார சென்னை 2.0 திட்டம் – விரைவில் தொடக்கம்!!

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சிங்கார சென்னை 2.0 கனவு திட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கார சென்னை 2.0:

தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக பதவியேற்றுள்ள ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவை அனைத்தும் மக்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் தேவையான ஒன்று. இந்நிலையில் விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 25 வருடங்களுக்கு முன்பு சென்னை மேயராக பதவி வகித்தவர்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

அப்போது சென்னை மாநகரை அழகுபடுத்துவதற்கு ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘சிங்கார சென்னை’ என்ற பெயரில் ஓர் திட்டம் மேற்கொண்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற பின்பு இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு சிங்கார சென்னை 2.0 என்று புதுப்பொலிவுடன் செயல்படவுள்ளது. மேலும் இதற்காக தற்போது பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் ‘பயோராக் டெக்னாலஜி’ முறையில் கடற்கரை பகுதிகளை வித்தியாசமான முறையில் மேம்படுத்தப்படும். மேலும் சிங்கார சென்னை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அண்ணாநகர் டவர் பூங்காவும் புதுப்பொலிவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. சென்னையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உருவாக்கவும், அறிவியல், இன்ஜினியரிங் மற்றும் கணித பூங்காக்களும், செல்ல பிராணிகளுக்கான பூங்காவும் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் அனைத்து மாநகராட்சி பள்ளிகளில் ‘ஸ்மார்ட் வசதிகள்’ மேற்கொள்ளப்படும். மேலும் இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடமும் விரைவில் கருத்து கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், இத்திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது என்றும் அதில் சிங்கார சென்னை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தேவைப்படும் செலவினங்கள் பற்றியும், நிதி ஆதாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தில் கல்வி, விளையாட்டு, சுகாதாரம் போன்றவற்றினை பாதுகாக்கும் வகையில் முக்கிய அம்சம் இடம் பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!