60 மணி நேர முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
நாட்டில் அதிவேகமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது மத்தியபிரதேச மாநிலத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
கடந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல தரப்பு மக்கள் தங்கள் வாழ்வாதாரம், வேலை, உயிர் போன்றவற்றை இழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டை விட தற்போது அதிவேகமாக கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது. இதனால் நாட்டில் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் சில மாநிலங்களில் ஞாயிற்று கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 8) மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலத்திலும் தடுப்பூசி திருவிழாவை நடத்த அறிவுறுத்தினார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் போபால், இந்தூர், குவாலியர் போன்ற முக்கிய நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விலக்கு ? – புதிய கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை !
இருந்தும் தற்போது மத்தியபிரதேச மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனை தொடர்ந்து மாநில முதல்வர் சிவராஜ்சிங் தலைமையில் நோய் பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனைக்கு பின்பு பேசிய முதல்வர் மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 9) மாலை 6 மணி முதல் வருகிற 12ம் தேதி காலை 6 மணி வரை 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.