இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களையும் அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஆந்திரா மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தின் கொரோனா பாதிப்பு குறித்து மறு ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் கொரோனா ஊரடங்கை மாநிலம் முழுவதும் நீடிப்பதாக முடிவு செய்துள்ளார். மாநிலத்தில் ஜூன் 20ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் முன்னதாக அமலில் இருந்தது. தற்போது ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு ஹால் டிக்கெட்!
ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளையும், மாநிலத்தில் கடைபிடிக்க வேண்டிய பல கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் மாநிலத்தில் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிமுறைகளில் மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. அனைத்து வணிகங்களும், அலுவலகங்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதித்துள்ளது. மாலை 6 மணிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்.
TN Job “FB Group” Join Now
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், இங்கு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு அலுவலகங்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆர்டிசி பேருந்துகளும் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதன் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு கொரோனா பாதிப்புகளின் நிலைமையை ஆய்வு செய்து முடுவு எடுக்கும்.