வன்னியர் சிறப்பு இட ஒதுக்கீடு வழக்குகள் – இடைக்கால உத்தரவு வழங்க நீதிமன்றம் மறுப்பு!
வன்னியர்கள் சிறப்பு இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அரசின் இட ஒதுக்கீடு தொடர்பாக இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிலுவை வழக்குகள்:
தமிழகத்தில் முன்னதாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்க்கு அரசு மொத்தமாக 20% இடங்களை ஒதுக்கி இருந்தது. அதில், சிறப்பு ஒதுக்கீடு முறையை ஜூலை 27ம் தேதி முதல் தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான புதிய ஆணையை 26.2.2021 முதல் செயல்படுத்துவதற்கான தமிழக அரசின் ஆணையை முதல்வர் ஜூலை 27ம் தேதி வெளியிட்டுள்ளார். அதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர் 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5% என்ற புதிய சிறப்பு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ளோவர் இன்போடெக் நிறுவனத்தில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு – அறிவிப்பு!
அதன்படியே, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசு நியமனம் இருக்கும் என்றும் அரசின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உள்ளது. மேலும், அரசின் இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் வழக்கறிஞரிடம் வாய்வழி சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை அறிந்து கொள்ள முடியாது.
TN Job “FB Group” Join Now
உள் இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அட்வகேட் ஜெனரல் நீதிபதிகளுக்கு தெரிவித்தார். இந்த வழக்குகள் நீதிமன்றத்தால் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு முன்னதாக இடைக்கால தடை உத்தரவு விதிக்க முடியாது நீதிபதிகள் அறிவித்தனர்.