இந்தியாவில் 4 கோடியே 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!
இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 4 கோடி 20 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
மத்திய அரசின் அறிக்கை:
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை எதிர்க்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி ஒன்று தான் என்று முன்னரே மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டம் முதலில் முன்னுரிமை அடிப்படையில் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் அரசின் அறிவுறுத்தல் படி ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வேகத்தில் செயல்படுத்தப்பட்டது. தற்போது மத்திய சுகாதாரத்துறை நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 4,20,00,000 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இது தடுப்பூசி செலுத்த தகுதியான 94 கோடி மக்களில் 4.5% ஆகும்.
இந்தியாவில் கிராமப்புற குழந்தைகளின் கல்வி பாதிப்பு – கல்வியாளர்கள் கருத்து!!
45 வயதிற்கு மேற்பட்ட 34% பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட 42% பேரும் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். 18 முதல் 44 வயதிற்கு உட்பட்ட 5% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும், தமிழகத்தில் இதுவரை 79,14,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் 59, 26,000 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 14,48,000 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 2,64,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை விவரம் தெரிவிக்கிறது.