மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி!!
தனியார் மற்றும் அரசு நடத்தும் தடுப்பூசி இயக்கம் மத்திய அரசு பணியாளர்களுக்கு மட்டுமே என்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். இந்த நோய் தொற்றுக்கு என்று இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே இதற்கு தீர்வாக பார்க்கப்பட்டு வருகின்றது. தடுப்பூசியினை கூடிய விரைவாக போட்டு கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றது.
SBI வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பை சரிபார்க்கும் விரிவான செயல்முறை இங்கே!!
மத்திய அரசு தற்போது தடுப்பூசி இயக்கம் மத்திய அரசு பணியாளர்களுக்கு மட்டும் தான் என்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல குழப்பங்கள் எழுந்துள்ளதாக தொழில்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மத்திய அரசு வழங்கிய கடிதத்தில் 45 ஆண்டு கால பணி ஆணைக்குள் வரும் பணியாளர்களுக்கு மட்டுமே மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்குள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
TN Job “FB
Group” Join Now
இப்படி ஒரு விவகாரம் இருப்பது பற்றி தங்களுக்கு தெரியாது என்று பல தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்றால், அவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டக் கூடும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை குறித்து சுகாதாரத்துறை முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.