தமிழகத்தில் புதிதாக அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? இன்று மாலை அறிவிப்பு!
தமிழகத்தில் ஜனவரி 5ம் தேதியான நாளை முதல் அமலுக்கு வர உள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து இன்று மாலை தமிழக முதல்வர் அறிவிக்க இருப்பதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் அதிகரித்து வந்த சமயத்தில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளின் விளைவால் தமிழகத்தில் நோய் தொற்று பரவல் மற்றும் பாதிப்புகள் குறைய தொடங்கியது. இதனால் அரசு படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து வந்த பண்டிகைகளை ஒட்டி நோய் பரவல் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு நிறுத்திவைப்பு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
இதனால் பண்டிகை கால நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தில் கோவிட் நிலைமை சீரடைந்து வந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று பரவல் நாட்டில் உறுதி செய்யப்பட்டதால் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் அரசு ஓமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் திடீரென்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 8ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இதனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தற்போது தமிழகத்தில் 24 பேர் ஓமைக்ரான் தொற்று பாதிப்பினால் சிகிச்சை எடுத்து வருவதாகவும், மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று மாலை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் அறிவித்துள்ளார்.