கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!
உலகம் முழுவதும் கோவாக்சின் தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகள் அனுமதி அளித்து வருகிறது. அதன்படி தற்போது பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கோவாக்சின் அனுமதி:
சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. இதனால் அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெரிய அளவில் உயிரிழப்புகளை கண்டுள்ளது. அதனால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஒரு குறிப்பிட்ட நாடுகள் மிகுந்த அளவில் பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்தது. அதன் பின்னர் இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு தடுப்பூசிகளை செலுத்தி வந்தது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.15 பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி இந்தியாவில் முதலில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் உற்பத்தி காலம் 6 மாதம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்ததால் கோவிஷீல்டு தடுப்பூசி அனுமதிக்கப்பட்டு அனைவருக்கும் 2 தவணைகள் செலுத்தப்பட்டு வந்தது. முதலில் செலுத்தப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகள் அனுமதி அளிக்காமல் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாக்சின் உற்பத்தி கால வரையறையை 12 மாதமாக அதிகரித்து உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!
கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயண அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள் வேறு இந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்றால் அவர்களை தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வந்தனர். தற்போது உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தற்போது கோவக்சினுக்கு பயண அனுமதி வழங்கியுள்ளது. அதனால் கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள் இந்த குறிப்பிட்ட நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.