தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே 22 இல் முடிவு – முதல்வர் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் (மே 22) முதல்வர் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆலோசனை கூட்டம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மே 24ம் தேதி வரை 14 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இருப்பினும் பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் தொடர்ந்து தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அவசர தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்வதற்கு இ- பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ – பதிவு பிரிவில் திருமணம், இறப்பு, மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு போன்ற காரணங்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டால் தொற்றின் தீவிரம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மே 24ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மே 22ம் தேதி அன்று அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவல், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். தொற்று பரவல் அதிகம் உள்ளதால் ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.