தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தை அடைந்துள்ளதால் அடுத்து வரும் 10 நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகம் முழுவதும் கொரோனா 2ஆம் அலை பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு 17 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள், கடைகள், மால்கள், சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், மதவழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. தவிர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மாவட்ட அளவில் கடும் நடவடிக்கைகள் – மத்திய உள்துறை அமைச்சகம்!
இருந்தாலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மருத்துவ குழுக்கள் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமான செய்தி ஒன்றை சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார். அதாவது அடுத்து வரும் 10 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு தீவிரமடையும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பல மாநிலங்களில் தினமும் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நோய் பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது’
TN Job “FB Group” Join Now
‘தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால் புதிய பாதிப்பு கூடுவதை தவிர்க்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். என்ன தான் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், அனைவரும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி வெளியே செல்லும் பொழுது முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கூடுதலாக அடுத்து வரும் 10 நாட்களில் கொரோனா தாக்கம் தீவிரமடையும் என மருத்துவக்குழு எச்சரிக்கை கொடுத்துள்ளதால் அனைவரும் கவனமாக இருங்கள்’ என தெரிவித்துள்ளார்.