தமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம் – ஒரே நாளில் 9 பேர்க்கு பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸுக்கு 70 வகை மருந்தா..? இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளது. மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
மேலும் ஈரோடு மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தாய்லாந்து சென்று வந்தவர்களுடைய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 பேர்க்கு கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |