மே 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!!

0
மே 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!!!
மே 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!!!
மே 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,82,315 ஆக உள்ளது. இதனால் முழு ஊரடங்கை கடைபிடித்தால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

முழு ஊரடங்கினால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதால் மத்திய அரசு முழு ஊரடங்கை அறிவிக்கவில்லை. இருப்பினும் மாநிலங்களில் உள்ள தொற்று பரவல் நிலையைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் 29,052 நபர்கள் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,447 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். தொற்றினால் பலியானவர்களை எரியூட்ட இடுகாடுகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும், பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!