முழு ஊரடங்கு மே 25 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சண்டிகர் மாநில நிர்வாகம் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவை மே 25ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நோய் பரவலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம லிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றொரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும் என்று சண்டிகர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை!!
அதாவது மே 25 அன்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். முன்னதாக கடந்த வாரம் திங்களன்று, கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், மே 11 முதல் இரவு மற்றும் வார ஊரடங்கு உத்தரவுகளை இன்னும் ஒரு வாரம் நீட்டிக்க சண்டிகர் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இரவு ஊரடங்கு உத்தரவு வார நாட்களில் மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் உள்ளது. வார இறுதி ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தொடங்கி திங்கள் அதிகாலை 5 மணி வரை தொடர்கிறது.
TN Job “FB Group” Join Now
கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதை குறைக்க வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் அது ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு மூலம் நீட்டிக்கப்பட்டது, அது இப்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 நோயாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக புகார்கள் வந்ததால், கோவிட் -19 சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை சுகாதாரத்துறை மீண்டும் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.