விடாது உயிர் பலி வாங்கும் கொரோனா.. இறந்தவர்களின் எண்ணிக்கை 65.69 லட்சமாக அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்!
உருமாறி பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.69 லட்சத்தை தாண்டியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா:
2019-ம் ஆண்டின் இறுதி முதல் இன்று வரை உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா நோய்த்தொற்றானது உலகநாடுகளிலில் பல லட்சம் மக்களை காவு வாங்கியது குறிப்பிடத்தக்கது. கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய்பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இனி தமிழ் மொழி கட்டாயம் – உயர்கல்வித்துறை அதிரடி!
இருப்பினும் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் 228 உலக நாடுகள் கொரோனா தாக்கத்தின் காரணமாக பெரும் பாதிப்பை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு தவணை தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தியும் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
Exams Daily Mobile App Download
கொரோனா வைரஸ் ஆனது உருமாறி பரவி வருவதால் தற்போதும் பலர் நோய்த்தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போதைய கணக்கெடுப்பின்படி கொரோனா தாக்கத்தின் காரணமாக உலகமெங்கும் 65.69 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 629,278,875 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 608,340,958 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 38,715 பேர் மோசமான நிலையில் மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்