தமிழகத்தில் ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா தொற்று – 478 பேர் பலி!!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்புக்கு 30 ஆயிரத்திற்கு குறைந்து வரும் நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலமாகவே கொரோனா நோய்த்தொற்று வீரியம் செலுத்தி வருவதனால் பல தரப்பு மக்கள் தங்களது உயிரை இழந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது ஏற்படும் உயிரிழப்பின் விகிதம் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 20 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருக்கும் பலனாக தற்போது பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி மே மாதம் தொடக்கம் மற்றும் மத்தியில் தினசரி பாதிப்பின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே 30 ஆயிரத்திற்கு குறைவாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்த தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மேலும் புதிதாக 27,936 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை 20,96,516 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வாகனங்கள் ஒப்படைப்பு – காவல்துறை அறிவிப்பு!
அதிகபட்சமாக கோவையில் 3,488 பேருக்கும், சென்னையில் 2,596 பேருக்கும் தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 478 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 24,232 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 31,223 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,70,503 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி மருத்துவமனையில் 3,01,781 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.