சமையல் எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம் – என்ன காரணம்?

0
சமையல் எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம் - என்ன காரணம்?
சமையல் எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம் - என்ன காரணம்?
சமையல் எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம் – என்ன காரணம்?

சமையல் எண்ணெய்க்கு ஆதாரமான பயிர்களின் விதைப்பு கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குறைவாக செய்யப்பட்டுள்ளதன் காரணமாக சமையல் எண்ணெயின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

சமையல் எண்ணெய்:

உலகம் முழுவதும் தற்போது பொருளாதார பண வீக்கம் வணிக நிறுவனங்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடியான மாற்றம் கவனிக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது. கடுகு, சோயாபீன், பருத்தி மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களின் வரத்து குறைந்து வருகிறது. இதனால் கடுகு, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயின் விலையை விட ஒரு கிலோவுக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் குறைவாக விற்பனை செய்கின்றனர்.

தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் முக்கிய கோரிக்கை!!

குறிப்பாக 60 % முதல் 70% வரையிலான சிறு எண்ணெய் அரைக்கும் ஆலைகள் நடப்பாண்டில் மூடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 2.7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்ட நிலக்கடலை நடைபாண்டில் 1.80 லட்சம் ஹெக்டேர் ஆகவும், 41,000 ஹெக்டேரியில் இருந்த சூரிய காந்தி விதைப்பு 37,000 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணைய்க்கான தேவை 10% அதிகரித்து உள்ளது. இறக்குமதியாளர்கள் நிதி இழப்பை சந்தித்து வரும் நிலையிலும், விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் விலை குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!