அரசு ஊழியர்களுக்கு வெளியாக இருக்கும் ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி 4% வரை உயர்வு!!
2023 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும், எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது எப்போது அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என விரிவாக பார்ப்போம்.
அகவிலைப்படி உயர்வு
பொதுவாக அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் பண வீக்கத்தை எதிர்கொள்வதற்காக அகவிலைப்படியானது ஆண்டுக்கு இரு முறை உயர்த்தப்படுகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஒரு சில மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – எம்.ஏ.சி.பி,பிடித்தத்தில் இருந்து விலக்கு!!
இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வருகிற மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதிய குழுவின் கீழ் சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனால் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைப்பார்கள். மேலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.29 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வரவிருக்கும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முறை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.