தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. அன்றாட தொழில் செய்யும் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அரசும் மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து உதவி செய்துள்ளனர். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு – செயலியில் மொழி மாற்ற வசதி!
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானிய திட்ட மதிப்பீடாக 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த திட்ட மதிப்பீட்டு தொகையில் இருந்து 168 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கி கடனுதவி பெறுவதற்கு செலுத்த வேண்டிய முத்திரைத்தாள் கட்டணத்திற்கான விலக்கு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துடன் காலாவதியாகும் தொழில் சார்ந்த அனைத்து உரிமங்களும் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனத்துக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும், டெண்டர் தொகை கட்ட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.