தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – குவியும் புகார்கள்! முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு புகார்:
தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த ஜன.14ம் தேதி அனைத்து தமிழர்களாலும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என சுமார் 2.15 கோடி பேருக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு வழங்கவிருந்த பொங்கல் தொகுப்பு கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக குறைந்த அளவிலான மக்களுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொங்கல் தொகுப்பு பெறாதவர்களுக்கு இந்த மாதம் இறுதி வரை அதாவது ஜன.31ம் தேதி வரை பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் தரம் குறைந்ததாக இருப்பதாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரடியாக பொங்கல் தொகுப்பு வழங்களை ஆய்வு செய்துள்ளார். எனினும் இன்னும் சமூக வலைத்தளங்களில் பொங்கல் தொகுப்பு குறித்த புகார் எழுந்த நிலையில் இருந்து வருகிறது.
பிப்ரவரி 6 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதனால் பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றிருந்த பொருட்களின் தரம் குறித்து எழுந்த புகார்கள் பற்றி ஒப்பந்த அதிகாரிகளுடன் இன்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் தொகுப்பு குறித்த புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று தலைமை செயலக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.