பிப்ரவரி 6 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் அமலில் இருந்து வரும் இரவு ஊரடங்கு உத்தரவை பிப்ரவரி 6 வரை நீட்டிப்பதாக பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவிக்கொண்டிருக்கக்கூடிய கொரோனா 3ம் அலையால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்றின் நிலவரத்தை கருத்தில் கொண்டு பீகார் மாநிலம் முழுவதும் தற்போது இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா பரவலை ஆய்வு செய்த முதல்வர் நிதிஷ் குமார், மாநில தலைமைச் செயலாளர் அமீர் சுபானி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்திற்கு பிற்பாடு பீகாரில் தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பீகார் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கின் போது மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். மேலும் பிப்ரவரி 6 வரையுள்ள இரவு ஊரடங்கு உத்தரவில் மால்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், பிக்னிக் ஸ்பாட்கள், திரையரங்குகள், கண்காட்சிகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) உயர்வு! 7வது ஊதியக் குழு தகவல்!
மத வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பொதுமக்கள் அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருக்கவும், அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் பீகாரில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகள் மூடப்பட்டிருக்கும் என்றும் அதே நேரத்தில் இம்மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகள் அதிகபட்சமாக 50% மாணவர் எண்ணிக்கையில் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.