தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புகார் புத்தகம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புகார் புத்தகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புகார் புத்தகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புகார் புத்தகம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க புகார் புத்தகம் வைக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. இப்படியாக இருக்க, நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு உணவுப்பொருள் விநியோகம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

இதனை கூட்டுறவு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணைத்து நடத்தியது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், கூடுதல் தலைமை செயலாளர் நசீமுதின், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான், சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மாற்றம் சட்டப்பேரவை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ‘தமிழகத்தில் மொத்தமாக 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு கொரோனா கால நிவாரணமாக அரசு வழங்கிய 4000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் 99 சதவீதம் பேருக்கு முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலத்தில் 1,133 ரேஷன் கடைகள் இருக்கின்றன. அதன் மூலமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு உணவுப்பொருள் விநியோகிக்கப்படுகிறது. இதில் 1000 முதல் 3000 அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகள் 5000 உள்ளன. பல அட்டைகள் உள்ளதால் மக்களுக்கு உணவு பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதில் சிரமம் இருந்து வருகின்றது. இதனால் கடைகளை பிரித்து கூடுதல் ரேஷன் கடைகளை தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போல் மக்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் கனிவாக நடந்து கொள்ள மறுக்கின்றனர் என்பது போன்று பல புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் புத்தகம் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களை பாதுகாப்பாக வைக்க கூடுதல் குடோன்களை உருவாக்கவும் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறாக அவர் பேட்டி அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!