தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அக்.25, 26 இல் போட்டிகள்!
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்ளுக்கு அக்-25 மற்றும் 26ம் தேதிகளில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
கலைப்போட்டிகள்:
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் இந்த போட்டி நடைபெறுவதால் இதில் அனைத்து பள்ளிகளும் கலந்து கொள்ளலாம்.
WhatsApp செயலியில் வரவிருக்கும் புதிய அம்சங்கள் – முழு விவரங்கள் இதோ!
வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை போன்ற 4 பெருந்தலைப்புகளில் கலா உத்சவமாக போட்டிகள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இது போன்ற போட்டிகள் ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. கொரோனா பிடியினால் 2 ஆண்டுகள் கழித்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற போட்டிகள் நடத்தினால் மாணவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் பங்கு கொள்ளலாம்.
தமிழகத்தில் அக். 21ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
அதாவது அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி, மெட்ரிக் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ என அனைத்து பள்ளிகளும் பள்ளி அளவிலான போட்டியை அக்-20 ம் தேதிக்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறும் என்று அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கடந்த கலா உத்சவ் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 மாணவிகள் மற்றும் 1 மாணவர் மாநில அளவில் வெற்றி பெற்றனர். அதேபோல் இந்த ஆண்டும் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் வெற்றி பெறும் அளவிற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.