விஜய் தொலைக்காட்சியில் ‘பிரபல’ காமெடி நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு – கவலையில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ஒரு முக்கிய ஷோ ஒன்று விரைவில் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் கூடிய கவலை அடைந்துள்ளனர்.
பிரபல நிகழ்ச்சி:
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஸ்மார்ட்போன் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்றாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக மக்களுக்கு பிடித்த வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சிகள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. பல நிகழ்ச்சிகள் புதிய விதமாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெரும் விதமாகவும் இருந்து வருகிறது.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி விலகல்? இது தான் காரணமா? வெளியான உண்மை தகவல்!
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களை வைத்து ‘காமெடி ராஜா, கலக்கல் ராணி’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. நகைச்சுவைகயாக பேசும் ராஜா மற்றும் கலக்கலாக இருக்கும் ஒரு ராணி என்று இருவர் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை மகிழ்வித்து வந்தனர். குறிப்பாக பாலா மற்றும் ரித்திகா இருவரது காம்போ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் என்று தான் கூற வேண்டும். அதேபோல் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் புகழ் இருந்தார்.
ராதிகாவுடன் கோபி நெருக்கமாக இருப்பதை பார்த்து ஷாக் ஆன அப்பா – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
இதனால் இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக புகழிற்கு பட வாய்ப்புகள் கிடைத்து வந்ததால் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். இப்படியாக இருக்க, இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி நிறுத்தப்படுவதற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.