கல்லூரிகள் திறப்பு செப்டம்பர் ??? – யுஜிசி நிலைப்பாடு என்ன ???
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதனால் அணைத்து செயல்களும் முடங்கியுள்ளது. ஊரடங்கிலேயே நாட்கள் நகர்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த கல்வியாண்டிற்கான ஆண்டு / செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. இதில் மேற்கொண்டு அடுத்த கல்வியாண்டில் தொடக்கம் குறித்து மேலும் பல சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
அதாவது அடுத்த கல்வியாண்டினை (20202- 2021) தொடங்குவதற்கு முதலில் நுழைவுத்தேர்வுகளை நடத்த வேண்டியது முக்கியமாகும். இதனை வரும் ஜூலையில் செயல்படுத்தலாம் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு வருவதனால் அவை செப்டம்பர் மாதம் தன நடத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.
யுஜிசி உயர்மட்டக் குழு ஆனது இது குறித்து ஆலோசித்து ஒரு நிபுணர் குழுவினை நியமித்தது. அதன் பரிந்துரையின் பேரில் கல்லூரிகள் செப்டம்பர் மாதம் தான் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்த அடுத்த கட்ட அறிவிப்புகள் நடவடிக்கைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |