தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் இன்று 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கைக்கு திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து பல குழப்பங்கள் இருந்தது.
தமிழக அரசு மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு? முதல்வரிடம் கோரிக்கை!
இது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மேலும் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, இணையவழி வகுப்புகளின் நிலை, நிலுவைத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் நேரடி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Which kind of college open
Thank you